பெரிய எதிர்பார்ப்புகளோடு அதிர்வெடி போல் ஆரம்பமானது 2020. வழமைபோல பலருக்கும் புதுவருட வாழ்த்துக்கள் தெரிவித்தேன். புதிய வருடம் ஆரம்பித்தாலே என்னுடைய வெளிநாட்டுப் பிரயாணங்களும் 10ம் தேதிக்குப் பின் ஆரம்பித்துவிடும். இந்த வருடம் பிரயாணங்கள் அதிகமாக இருக்கப்போகிறது என்று தெரிந்தது. சிங்கப்பூர், இந்தியா என்று ஜனவரியில் போய்வந்துவிட்டு அதற்கடுத்த மாதம் ஆஸ்திரேலியாவும் போய்வந்தேன். யாருக்குத் தெரிந்திருந்தது, நிலைமை இந்தளவுக்கு 2020ல் மாறப்போகிறதென்று. ஜனவரி மாதம் முடிவதற்குள்ளேயே சீனாவில் கோவிட்-19 பற்றிய செய்திகள் அடிபட ஆரம்பமாயின. மார்ச் மாதத்தில் உலக நாடுகள் தங்களுடைய எல்லைகளை மூட ஆரம்பித்தன. இப்போது 9 மாதங்கள் போனபோக்கே தெரியவில்லை. புதிய வருடத்தில் காலடி எடுத்துவைக்க இன்னும் ஓரிரு நாட்களே இருக்கின்றன. என்னவெல்லாம் செய்திருக்கிறது இந்த 2020. (இந்த ஆக்கம் டிசம்பர் 2020 எழுதப்பட்டது).