வாசிப்பனுபவம்
‘வாசிக்கிறவன் இறப்பதற்கு முன் ஆயிரம் வாழ்க்கை வாழ்கிறான்’ என்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் ஜோர்ஜ் ஆர். ஆர். மார்டின். ‘எனக்குப் போதுமான அளவுக்கு ஒரு பெரிய கோப்பைத் தேனீரையாவது, ஒரு பெரிய புத்தகத்தையாவது உங்களால் எனக்குத் தர முடியாது’ என்றார் வாசிப்பதிலும், எழுதுவதிலும் திளைத்துப்போயிருந்த சி. எஸ். லூயிஸ். ‘என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கும்போது நான் புத்தகங்களை வாங்குவேன்; மீதமிருந்தால் உணவும் உடுதுணியும் வாங்குவேன்’ என்றார் இராஸ்மஸ். ‘சராசரி மனிதனாக இருக்க விரும்பாத எவருக்கும் அவசியமானது வாசிப்பு’ என்றார் பெரும் தொழில் முனைவோரும், ஊக்கமூட்டுப் பேச்சாளருமான ஜிம் ரோன்.