இந்த ஆக்கத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் இலக்கிய ஆளுமை கிறிஸ்தவ விசுவாசி அல்ல. வாழ்க்கையில் எல்லாவற்றையும் நாம் கிறிஸ்தவர்களிடம் இருந்து மட்டும் கற்றுக்கொள்ள முடியாது. கிறிஸ்தவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் புலமை இருக்காது. நம் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் படிப்பிப்பவர்கள் கிறிஸ்தவர்களா என்ன? மொழியாக்கத் திறனுள்ள இந்த ஆளுமையிடம் இருந்து நாம் விசுவாசத்துக்குரியவற்றைக் கற்றுக்கொள்ளப் போவதில்லை; மொழியாக்கத்திற்கு அவசியமானவற்றைப் பற்றி மட்டுமே கற்றுக்கொள்ளப் போகிறோம். அதில் எந்தத் தவறும் இல்லை. மொழியாக்கத்திற்கான புலமையும், திறனுமுள்ள கிறிஸ்தவர்கள் நம்மினத்தில் அரிதாகக் காணப்படும் இக்காலத்தில் இந்த இலக்கிய ஆளுமையின் பகிர்வும், கருத்துக்களும் நமக்கு மிகவும் உதவுகின்றன. – ஆர்