“வேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி” – தன் மந்தையை சூழ்ந்திருக்கும் ஆபத்தை உணர்ந்த ஒரு மேய்ப்பனின் கருத்தாழமிக்க எச்சரிக்கைப் பதிவு.
இளம் விசுவாசிகளாகிய எங்களுக்கு அத்தியாவசியமாக இருக்கவேண்டிய கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்தை, சமுதாயத்தில் இன்று காணப்படும் கொள்கைகளோடு ஒப்பிட்டு விளக்கப்படுத்தியுள்ளீர்கள். கர்த்தருடைய பராமரிப்பின் மேன்மையை எண்ணி அதிகமாக அவரைத் துதிக்கிறோம். இந்த ஆக்கம் எனக்கு மோட்சப் பயண நூலின் 2ம் பாகத்தில் வரும் உறக்க பூமியும், அதனைக் கடப்பதற்கு முன்பு பயணிகளுக்குக் கிடைத்த மேய்ப்பர்களின் எச்சரிக்கையையும், சிக்கலான சமயத்திலெல்லாம் சரியான பாதையை வேதம் என்ற வரைபடத்தின் மூலமாகக் கண்டறிந்ததையும் ஞாபகப்படுத்தியது.