மனித சித்தமும், சுவிசேஷ அறிவிப்பும்

சமீபத்தில் என் சபையில் நான் ஒரு பிரசங்கத்தை அளித்தபோது, அதில் கிறிஸ்துவை விசுவாசிக்காமல் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘உங்களைக் கிறிஸ்துவை விசுவாசிக்கும்படியாக கர்த்தர் அழைக்கிறார். இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசிக்காமல் இருப்பது உங்களுடைய பொறுப்பில்லாத தன்மையையே காட்டுகிறது. எத்தனையோ காரியங்களில் வாழ்க்கையில் பொறுப்போடு நடந்துகொள்ளுகிற நீங்கள் இந்த விஷயத்தில் அக்கறைகாட்டாமல் இருப்பது நியாயமானதல்ல. நீங்கள் பரலோகத்துக்குப் போகாமல் இருக்கப்போவது உண்மையானால் அதற்கு நீங்கள் எவரையும் குற்றஞ்சாட்டமுடியாது. உங்களுடைய அவிசுவாசத்தினால், கிறிஸ்துவை விசுவாசிக்க மறுக்கும் உங்களுடைய பொறுப்பற்ற தன்மையே நீங்கள் பரலோகத்தை அடையமுடியாமல் செய்துவிடும். இயேசு என்னிடம் வா, நான் இளைப்பாறுதல் தருகிறேன் என்று வாக்குறுதி தந்திருக்கும்போது அதை நிராகரித்து வாழ்வது தண்டனைக்குரிய குற்றம். இயேசு நீ கதறக்கதற, உனக்குக் கைவிலங்கு மாட்டி பரலோகத்துக்கு அழைத்துச் செல்லப்போவதில்லை. எனவே, ஏசாயாவின் வார்த்தைகளை விசுவாசித்து இயேசு தரும் ஜீவத்தண்ணீரை அருந்த ஓடிவாருங்கள், அதற்குப் பணம் கொடுக்கத்தேவையில்லை, இலவசமாக இயேசு தரும் இரட்சிப்பை இரண்டு கையாலும் விசுவாசத்தோடு வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று அவிசுவாசிகளைப் பார்த்துப் பிரசங்கித்தேன்.

Continue reading