பாவகரமான வாழ்வியல் முறை நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது என்று நாம் நினைத்தால், நாம் பெரியளவில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். சிலர் தீமையை நன்மை என்று சொல்லுவார்கள் (ஏசாயா 5:20), நாம் செய்யக் கூடாதவைகள் நமக்கு இன்பம் தருவதைப் போல் தென்படலாம், ஆனால் அதை விழுங்கியபிறகுதான் தெரியும், அது மிகவும் கசப்பானது என்று. சாத்தான், ஆதாமுக்கும் ஏவாளுக்கும், நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனால், நீங்களும் கடவுளைப் போல் இருப்பீர்கள் என்று வாக்குறுதி தந்தான் (ஆதியாகமம் 3:5). ஆனால் அவர்களுடைய கீழ்ப்படியாமையின் முடிவு வேறுவிதமாக அமைந்தது. பாவத்தின் தன்மையைப் போலவே, அது ஏற்படுத்தும் விளைவுகளும், முழுமையாக தீமையானதே.