இது என்ன, என்று கேட்கிறீர்களா? பொறுங்கள் விளக்கமளிக்கிறேன். நாம் நம்பிப் பயன்படுத்துகிற வேதாகமத்தைப்பற்றியதொரு அவசியமான உண்மையைத்தான் இப்போது விளக்கப்போகிறேன். வேதம் கர்த்தரின் வெளிப்படுத்தல் என்றும் அதன் மூலமே கர்த்தர் இன்று நம்மோடு பேசி வருகிறார் என்பதும் நாமறிந்த உண்மையே. அதிலும் பலருக்கு சந்தேகமிருந்து வருகிறது. இருந்தாலும் சீர்திருத்த கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் வேதம் கர்த்தரின் முடிவான சித்தத்தின் வெளிப்படுத்தல் என்பதில் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த உண்மையில் மேலும் ஆழமான அம்சங்கள் அடங்கிக் காணப்படுகின்றன.
Continue reading