அதிகாரம் 4 – A.W. பிங்க்
ஒரு பிரசங்கி, தேவனுடைய வார்த்தை அடங்கியிருக்கிற புத்தகமாகிய வேதத்தில் தேறினவனாகவும், அதிலிருந்து புதியவைகளும் பழையவைகளுமாகிய பொக்கிஷத்தை எடுத்துரைக்கும் தகுதியுள்ளவனாகவும் இருக்க வேண்டும். வேதமே அவனுடைய பாடநூலாக இருக்க வேண்டும். அதிலிருந்து புறப்படும் ஜீவனுள்ள தண்ணீரை அவன் அனுதினமும் பருக வேண்டும். இதற்காக நாம் நல்ல மொழிபெயர்ப்புள்ள வேதநூலையும், ஒரு ஒத்தவாக்கிய அகராதியையும் பயன்படுத்த வேண்டும். அத்தோடு, மூலமொழியிலுள்ள வார்த்தைகளை அறிந்துகொள்ளுவதற்கான இன்டர்லீனியர் வேதநூலையும் அவ்வப்போது பயன்படுத்தலாம். எந்தவொரு வேதப்பகுதியையும் முதலாவதாக நாம் வாசித்து, விரிவான ஆய்வு செய்தபிறகுதான், விளக்கவுரைகளை நாட வேண்டும். வேதப்பகுதியை நீங்கள் கவனத்துடன் முழுமையாக ஆராய்வதற்கு முன்பாக அல்லது நீங்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்கு முன்பாக விளக்கவுரையை நாடும் ஆபத்திலிருந்து பிரசங்கிகளாகிய உங்களைப் பாதுகாத்துக்கொள்ளும்படி உறுதியாக வலியுறுத்துகிறேன். வேதம் மிகவும் எளிமையாக எழுதப்பட்டிருக்கிறது. அதனால், யாருடைய உதவியுமின்றி வேதத்தைப் படித்து விளங்கிக்கொள்ள முடியும் என்று நினைப்பதும், அல்லது வேதம் மிகவும் கடினமானது, சாமானிய மனிதன் அதை ஆராய முற்படுவது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று நினைப்பதும் எப்படி தவறானதோ, அதேபோல, தேவனுடைய ஊழியர்களான மற்றவர்களுடைய உழைப்பைச் சார்ந்திருந்து, அவர்களுடைய கருத்துக்களை வெறுமனே எதிரொலிப்பதும் மிகவும் ஒழுங்கற்ற செயல்.
Continue reading