பரிசுத்த வேதாகமம்

இந்த ஆக்கம் பரிசுத்த வேதாகமத்தைப் பற்றியது. அதிலிருந்தே நாம் கிறிஸ்தவ இறையியல் தொடர்பான எதையும் கற்க ஆரம்பிக்க வேண்டும். பரிசுத்த வேதாகமத்தைப் பற்றிய நம்முடைய நம்பிக்கைகள் தவறாக இருக்குமானால் நாம் வேதபூர்வமான கிறிஸ்தவர்களாகவோ, சபையாகவோ இருக்கமுடியாது. கத்தோலிக்க மதம் வேதம் மட்டுமே கர்த்தருடைய வார்த்தை என்பதை நம்புவதில்லை. கெரிஸ்மெட்டிக் குழுவினர் வேதத்திற்குப் புறத்தில் இருந்தும் கர்த்தர் தொடர்ந்து வெளிப்படுத்தலைத் தந்துகொண்டிருக்கிறார் என்று நம்புகிறார்கள். வேதத்தில் சத்தியமும், மனித சிந்தனைகளும் கலந்து காணப்படுகின்றன என்று தாராளவாதப் போக்குடையவர்கள் (Liberal) நம்புகிறார்கள். வேதத்தைப் பற்றிய நம்முடைய நம்பிக்கைகள் தவறாக இருக்குமானால் நாம் சத்தியத்தை மட்டுமே நம்புகிறோம் என்று சொல்லமுடியாது. வேதம் பற்றிய உங்களுடைய நம்பிக்கை என்ன?

Continue reading