– ஷேபா மிக்கேள் ஜோர்ஜ்
மோட்சப் பிரயாணம் நூலில் சந்தேகக் கோட்டை அரக்கனிடம் போராடி வெற்றி பெற்ற பின்பு பரலோகப் பயணிகளின் நன்மையைக் கருத்தில் கொண்டு பக்கத்து புல்வெளிப் படிக்கட்டுகள் அருகே விசுவாச வீரர்களால் ஏற்படுத்தி வைக்கப்பட்ட “எச்சரிக்கைப் பலகை” போல இந்த 21-ம் நூற்றாண்டில் மெய் கிறிஸ்தவத்திற்கு எதிராக உருவாகி ஆத்துமாக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் போலிப் போதனையான தோமா வழி கிறிஸ்தவத்திற்கு எதிராக உயர்த்தப்பட்டிருக்கும் எச்சரிக்கைப் பலகையாக இந்த “தோமா கிறிஸ்தவம்” நூலைப் பார்க்கிறேன்.