குடும்பம் படும் பாடு

இந்த இதழ் குடும்ப இதழாக மலர்ந்திருக்கிறது. இதழில் அனைத்து ஆக்கங்களும் குடும்பத்தின் வெவ்வேறுபட்ட அம்சங்களை அலசுவதாக இருப்பதைக் கவனிப்பீர்கள். ஏன் இதைக் குடும்ப இதழாக வெளியிட்டிருக்கிறோம் என்பதை இந்த ஆக்கத்தின் மூலம் உங்களுக்கு விளங்கவைக்க முயற்சி செய்திருக்கிறேன். நல்ல குடும்பங்கள் இருந்தால் சபை நல்லதாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் நல்ல குடும்பங்கள் என்று குறிப்பிட்டிருப்பது சீரழிந்த பண்பாட்டிற்கு முழுக்குப்போட்டு வேதபூர்வமாக குடும்பத்தை நடத்தி வருகிறவர்களைத்தான். அத்தகைய நல்ல குடும்பங்கள் இல்லாமல் எப்படி சபை உருவாக முடியும்? போலித்தனமும், பிரச்சனைகளும், ஆணாதிக்கமும், பெண்அடிமைத்தனமும் ஆண்டு வரும் குடும்பங்கள் சுவிசேஷ விடுதலை அடைய வேண்டியவை. சுவிசேஷத்தால் விடுதலை அடைந்து, குடும்பத்தைப் பற்றி வேதம் போதிப்பவற்றையெல்லாம் வாழ்க்கையில் வைராக்கியத்தோடு பின்பற்றும்போதுதான் குடும்பங்கள் சீரானதாக அமைய முடியும். அத்தகைய குடும்பங்களைக் கொண்டிருக்கும் போதகர்களும், சபைகளுமே கிறிஸ்துவின் நடமாட்டத்தைத் தங்கள் மத்தியில் கண்டுவரும் சபைகளாக இருக்கமுடியும்.

Continue reading