– அறிமுகம் –
பவுல் ரோமருக்கெழுதிய நிருபத்தை இப்போது சபையில் பிரசங்கம் செய்து வருகிறேன். முழு நூலின் வரலாற்று இறையியல் பின்னணியின் அடிப்படையில் தொடர்ச்சியாக வசனம் வசனமாக வியாக்கியானப் பிரசங்கமளிப்பதே என் வழக்கம். இப்போதைக்கு கர்த்தரின் கிருபையால் 17 பிரசங்கங்களை 2ம் அதிகாரத்தின் நடுப்பகுதிவரையும் அளித்திருக்கிறேன். இந்நூலைப் பிரசங்கித்து முடிய ஒரிரு வருடங்களாவது எடுக்கும் என்று நினைக்கிறேன்.