2 இராஜாக்கள் 1:1-18
இந்த ஆக்கத்தில் இரண்டு இராஜாக்கள் முதலாவது அதிகாரத்தை நாம் ஆராயப் போகிறோம். தமிழ் வேதத்தில், பழைய ஏற்பாட்டில், முதலாவது இராஜாக்கள், இரண்டாவது இராஜாக்கள் என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் மூல மொழியான எபிரெய வேதத்தில் இது ஒரே நூலாகத்தான் காணப்படுகிறது. சில நடைமுறை காரணங்களுக்காக பிற்காலங்களில் அதை இரண்டு பிரிவுகளாகப் பிரித்திருக்கலாம். இரண்டு இராஜாக்கள் முதலாவது அதிகாரத்தைப் பார்க்கிறபொழுது எலியா தீர்க்கதரிசியினுடைய ஊழியத்தின் கடைசிக் காலப் பகுதியை அதில் வாசிக்கிறோம். இதன் மூலம் முதலாவது இராஜாக்கள் நூல் இரண்டு இராஜாக்களில் தொடருகிறதைத்தான் இதில் நாம் கவனிக்கிறோம்.