2 இராஜாக்கள் 1:2-22
இந்த ஆக்கத்தில் நாம் 2 இராஜாக்கள் 2:1-22 வசனங்கள்வரை சிந்திப்போம். கடந்த ஆக்கத்தில் பார்த்த முதலாவது அதிகாரத்தைப் போலவே இந்த இரண்டாம் அதிகாரமும் மிகவும் அதிரடியாக ஆரம்பிக்கிறது. முதலாவது அதிகாரத்தில் ஆகாப் மரணமடைந்தான் என்ற அறிவிப்போடு அது ஆரம்பித்ததைப் பார்த்தோம். இந்த அதிகாரம் எலியா பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறான் என்று ஆரம்பிக்கிறது.
“கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது” (2 இராஜாக்கள் 2:1)