ஊழியர்களுக்கான மகாநாடு

‘பிரசங்கிகளும், பிரசங்கமும்’

21 – 23, மார்ச் 2013

பேச்சாளர்:

Pastor R. Bala, Auckland, New Zealand

இடம்:

சேவா லங்கா, 2ம் லேன், பாலவிநியாகர் வீதி, தவசிக்குளம், வவுனியா, ஸ்ரீ லங்கா

(Seva Lanka, 2nd Lane, Palavinayagarveethy, Thavasikkulam, Vavunia)

யாருக்கு:

ஏற்கனவே திருச்சபைகளில் போதகர்களாக பணிபுரிகிறவர்களும், பிரசங்க ஊழியத்தை செய்கிறவர்களும், ஊழியக்காரர்களாக தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறவர்களும் இதில் கலந்துகொள்ளலாம். எந்த கிறிஸ்தவ டினாமினேஷன் பிரிவைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்துகொள்ளலாம்.

இதன் செயல்முறை:

பிரசங்கப் பணியின் அவசியத்தையும் அப்பணி பற்றிய சகல விபரங்களையும் விளக்கி நடைமுறையில் அதை எப்படி வேதபூர்வமாக கர்த்தரின் மகிமைக்காக செய்வது என்பது பற்றியும் தெளிவாக செயற்பயிற்சி முறையில் போதித்து பிரசங்கிகளின் பிரசங்க ஊழியத்தை ஆவிக்குரிய விதத்தில் அமையுமாறு இருக்கத் துணை செய்வதே இதன் நோக்கம். பிரசங்கம் செய்ய அவசியமான இறையியல் அறிவு, வாசிக்க வேண்டிய நூல்கள், பிரசங்கம் தயாரிப்பதற்கு எடுக்க வேண்டிய தவிர்க்க முடியாத அவசியமான நடவடிக்கைகள், அதற்காகப் பின்பற்ற வேண்டிய தொழிலொழுக்கம் ஆகியவை பற்றியும் தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படும். ஒவ்வொரு நாளும் இவை சம்பந்தமான கேள்வி-பதிலுக்கான நேரமும் ஒதுக்கப்படும்.

குறிப்பு:

தங்குமிடமும், உணவும் இலவசம். தங்குமிட உதவி தேவையில்லாதவர்களுக்கு போக்குவரத்துக்கான உதவி தரப்பட்டும். கலந்துகொள்ளுபவர்களுக்கு பிரசங்கம் பற்றிய நூலொன்றும் வழங்கப்படும்.

பதிவு பற்றிய விளக்கம்:

இதில் பங்குபெற்று பயனடைய விரும்புகிறவர்கள் மார்ச் (பங்குனி) 7ஆம் திகதிக்கு முன்பாக உங்களைப் பற்றிய விபரங்களோடு கீழ் காணும் முகவரிக்கு எழுதித் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

வண. ச. பார்த்திபன்
Rev. S. Partheepan

195/1 ஸ்டேசன் வீதி, வவுனியா, ஸ்ரீ லங்கா
195/1 Station Road, Vavunia, Sri Lanka
M
obile Phone: 077 7577766
E-mail: partheepan@gmail.com

பொறுப்பாளர்கள்:

சீர்திருத்த புரொட்டஸ்தாந்து மிஷன்
Reformed Protestant Mission, Vavunia, Sri Lanka

One thought on “ஊழியர்களுக்கான மகாநாடு

மறுமொழி தருக