மீட்பு: நிறைவேற்றமும், நடைமுறைப்படுத்தலும்

Redemption: Accomplished and Applied, John Murray, The Banner of Truth, Pgs 192.

redemption 3dபேராசிரியர் ஜோன் மரே ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். பல வருடங்களாக அமெரிக்காவில் வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் கல்லூரியில் வரையறுக்கப்பட்ட இறையியல் (Systematic Theology) பாடத்தைக் கற்றுக்கொடுத்தவர். அவரெழுதிய நூல்களில் ஒன்றுதான் Redemption: Accomplished and Applied. இந்த ஆங்கில நூலை நான் பல தடவைகள் வாசித்திருக்கிறேன். இன்றைக்கும் அதன் பக்கங்களை நான் அவசியமானபோது திறக்கமாலிருந்ததில்லை.

இந்நூல் கிறிஸ்துவின் மீட்பாகிய வேத சத்தியத்தை விளக்குகிறது. அதாவது, தனக்கு நியமிக்கப்பட்ட மீட்பாகிய பணியைக் கிறிஸ்து பிதாவின் கட்டளைக்கிணங்கி மனித உருவேற்று எவ்வாறு நிறைவேற்றினார் என்பதையும், அந்த மீட்பின் பலன்களாகிய கிருபைகள் எந்தவகையில் பிதாவால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் கிரியையால் நடைமுறையில் நிறைவேற்றப்படுகிறது என்பதையும் இந்நூல் விளக்குகிறது.

நூலின் முதல் பாகம் மீட்பின் நிறைவேற்றத்தைப் பற்றியது. அதில் ஐந்து அதிகாரங்கள் இருக்கின்றன. அதன் இரண்டாம் பாகம் மீட்பின் பலன்களைப் பற்றியது. அதில் பத்து அதிகாரங்கள் இருக்கின்றன. இரண்டாம் பாகத்தில் விளக்கப்பட்டிருக்கும் மீட்பின் பலன்களையே ‘இரட்சிப்பின் படிமுறைகள்’ என்று கூறுவார்கள்.

பேராசிரியர் மரே இந்நூலில் மீட்போடு தொடர்புடைய ஒவ்வொரு சத்தியத்தையும் வேத ஆதாரங்களோடு மிகத் தெளிவாக ஆரம்பம் முதல் எழுதியிருக்கிறார். அவசர அவசரமாக வாசித்து முடித்துவிடக்கூடிய நூலல்ல இது. நூலில் ஒவ்வொரு வாக்கியமும் சிந்தித்துப் படிக்க வேண்டியவை. அந்த வாக்கியங்களில் அடங்கியிருக்கும் உண்மைகள் பெரிது. வார்த்தைகளையும், வாக்கியங்களையும் கவனத்தோடு பேராசிரியர் மரே பயன்படுத்தியிருக்கிறார். சத்தியத்தை தெளிவாகக் குழப்பமில்லாமல் விளக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டியிருக்கிறார்.

என் கையில் இரண்டுவிதமான பதிப்புகள் இருக்கின்றன. பல வருடங்களுக்கு முன் நான் வாங்கிய நூல் 1979ல் வந்த பேனர் ஆவ் டுருத் பதிப்பு. அது 192 பக்கங்களைக் கொண்டது. இப்போது இதை மறுபடியும் இந்தப் பதிப்பகத்தார் அழகிய முறையில் வெளியிட்டிருக்கிறார்கள்.

சத்தியத்தை சத்தியமாக தெளிவாக விளக்குகிற, எழுதுகிறவர்களில் முக்கியமானவராக நான் பேராசிரியர் மரேயைக் கருதுகிறேன். ஏதாவது ஒரு சத்தியத்தில் விளக்கம் தேவையானால் பேராசிரியர் மரே என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம் என்று அவருடைய நூல்களைப் புரட்ட என் கை தவறியதில்லை. அந்தளவுக்கு அவருடைய விளக்கங்களுக்கு நான் மதிப்புத் தருகிறேன். இதற்காக அவருடைய ஞானஸ்நானத்துக்கான விளக்கத்தை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன் என்று அர்த்தமல்ல. அது போன்ற சிலதைத் தவிர்த்து ஏனைய இறையியல் விளக்கங்களில் அவருடைய தெளிவைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். எதையும் சுருக்கமாக அதேவேளை தெளிவாக வேத வசனங்களைத் தந்து விளக்குவதில் அவர் மன்னர்.

கிறிஸ்து யாருக்காக மரித்தார்? என்ற வேத வினாவுக்கு பதிலளிப்பதில் அநேகர் குழப்பத்தை உண்டாக்குவார்கள். பேராசிரியர் மரேயிடம் அதைப் பார்க்க முடியாது. மரே சொல்லுவதை வாசியுங்கள், ‘Did Christ come to make the salvation of all men possible, to remove obstacles that stood in the way of salvation, and merely to make provision for salvation? Or did he come to save his people? Did he come to put all men in salvable state? Or did he come to secure the salvation of all those who are ordained to eternal life? Or did he come effectively and infallibly to redeem?’ இப்படிப் பல அவசியமான தவிர்க்கமுடியாத வினாக்களை எழுப்பும் மரே அவற்றிற்கு என்ன பதில் சொல்லுகிறார் தெரியுமா? ‘The doctrine of the atonement must be radically revised if, as atonement, it applies to those who finally perish as well as to those who are the heirs of eternal life. In that event we should have to dilute the grand categories in terms of which the Scripture defines the atonement and deprive them of their most precious import and glory. This we cannot do’ என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் மரே. தொடர்ந்து அவர், ‘The saving efficacy of expiation, propitiation, reconciliation, and redemption is too deeply embedded in these concepts, and we dare not eliminate this efficacy.’ கிறிஸ்து சிலுவையில் மரித்தது பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்டு அவருடைய கையில் கொடுக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே என்பதை ஆணித்தரமாக விளக்கும் மரே அதற்கு இந்தப்பகுதியில் யோவான் 6:38-39 ஆகிய வசனங்களை உதாரணங் காட்டுகிறார். ‘கிறிஸ்து நிறைவேற்றிய மீட்பில் மீட்கப்படுகிறவர்களின் பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது’ என்கிறார் மரே. ‘அதனால் யாருக்காக மீட்பு தீர்மானிக்கப்பட்டதோ, உருவாக்கப்பட்டதோ, நிறைவேற்றப்பட்டதோ இறுதியில் நடைமுறையில் எவர்களுக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர்களுக்கு மட்டுமே மீட்பின் பலன் சொந்தமானது’ என்கிறார் மரே.

கிறிஸ்து யாருக்காக மரித்தார்? என்பதை நாம் சென்டிமென்டலாகப் பார்க்கிறபோதுதான் பிரச்சனை உருவாகிறது. அதெப்படி கிறிஸ்து சிலருக்காக மரிக்காமல் போகலாம்? என்ற கேள்வி சென்டிமென்டல் கேள்வி. பரலோகத்துக்கு ஒருவன் போகாமலிருந்தால் அவன் பாவத்தில் இருந்து மனந்திரும்பாத ஒரே காரணத்தால்தான் அங்கு போகாமல் இருக்கிறான் என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது. மனந்திரும்புகிற எவருமே பரலோகம் போகாமல் இருந்ததில்லையே. பரலோகம் போகிற எல்லோருக்காகவும் கிறிஸ்து நிச்சயமாக மரித்திருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. பரலோகம் போகாதவர்களுக்காக அவர் மரித்திருக்க முடியாது. இதையெல்லாம் அருமையாக வேத ஆதாரங்களோடு பேராசிரியர் மரே இந்த நூலில் விளக்கியிருக்கிறார். இவை தவிர இரட்சிப்பின் படிமுறையில் காணப்படும் கிருபைகள் ஒவ்வொன்றையும் – திட்ப உறுதியான அழைப்பில் ஆரம்பித்து, மகிமைப்படுத்தப்படுதல் வரையும் அத்தனையையும் அவர் அருமையாக விளக்கியிருக்கியிருக்கிறார். Regeneration, Faith and Repentance, Justification ஆக்கங்கள் அருமையிலும் அருமை.

சில வேளைகளில் ‘என்னடா இந்த நூல் சின்னதா இருக்கே’ என்று நூலில் பக்க எண்ணிக்கையை மட்டும் பார்த்து நூலைக் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. பேராசிரியர் மரேயின் எழுத்தின் சிறப்பே சுருங்கக் கூறி விளங்க வைப்பதுதான். அவர் தன் வாழ்நாளில் அதிகமாக எழுதித் தள்ளியிருக்கவில்லை. ஆனால், எழுத்தியிருப்பவையெல்லாம் தங்கக் கட்டிகள் என்றுதான் சொல்லுவேன்.

இந்த நூல் ஒரு நாள் வாசித்துவிட்டு வைத்துவிட வேண்டிய நூலல்ல. தொடர்ந்து அடிக்கடி வாசித்து சிந்தித்து சத்தியத்தில் வளர உதவும் நூலிது. ஆங்கிலத்தில் இதை வாசிக்க முடிந்தவர்கள் தவறாது வாசிக்க வேண்டிய தவிர்க்கக் கூடாத நூலிது. இத்தகைய நூல்களை வாசித்து சிந்திக்கிறவர்கள் நம்மத்தியில் வளருகிறபோதுதான் விடிவு நம்மினத்துக்குக் கிறிஸ்தவத்துக்கு வரும்.

இதை நூலாக மட்டுமல்லாமல் இணையத்தில் கின்டில் மூலம் டெப்லெட்டிலோ, ஐபேட்டிலோ இறக்கி வாசிக்கக் கூடிய வசதியும் இருக்கிறது.

2 thoughts on “மீட்பு: நிறைவேற்றமும், நடைமுறைப்படுத்தலும்

  1. Pingback: நீயும் நானுமா! (பாகம் 2) | திருமறைத்தீபம் (Bible Lamp)

  2. இதன் தமிழ் பதிப்பை யாராவது வெளியிட்டிருக்கிறார்களா? அப்படியில்லாதுவிட்டால் உங்களால் அந்த பணியை செய்ய இயலுமா? ஏற்கனவே பல கட்டுரைகளையும் நூல்களையும் தமிழாக்கம் செய்த உங்கள் பணி உன்னதமானது. இந்த நூல் தமிழுக்கு வந்தால் ஆங்கிலம் அவ்வளவாக வாசிக்கதெரியாத பலருக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

    Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s