ஷேபா மிக்கேள் ஜோர்ஜ்
“பாவம் பொல்லாதது” நூல் எனது கரத்தில் கிடைத்திருப்பதைக் கர்த்தருடைய பராமரிப்பின் ஆச்சரியங்களின் வரிசையில் எனக்கு கிடைத்த மற்றொரு புதையலாகப் பார்க்கிறேன். முழுப் புத்தகத்தையும் வாசித்த பின்பு அதன் தலைப்பை உச்சரிக்கும் போதெல்லாம் அதனோடு சேர்ந்து பழைய பாம்பின் ஒரு வஞ்சகச் சீறலும் நினைவில் தோன்றி பாவத்தை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட்டு விடாமல் அதைக் குறித்த சரியான பார்வையோடு தீவிரமாகச் செயல்பட்டு முற்றாக அழிக்க வேண்டும்! என்ற வைராக்கிய உணர்வை ஏற்படுத்துகிறது.