தற்காலத்தில் வேதப்பிரசங்கங்களில் பெரும்பாலானவை வேதவிளக்க விதிகளைப் பின்பற்றாமல் கொடுக்கப்பட்டு வரும் பிரசங்கங்களாகவே இருக்கின்றன. அதாவது திருச்சபை வரலாற்றில் சபைப் பிதாக்களின் காலத்தில் இருந்ததைப் போல “ஆவிக்குரியதாக்குதல்” (spiritualising) என்ற முறையைப் பின்பற்றிக் காணப்படுகின்றன. வேதம் ஆவிக்குரிய சத்தியங்களால் நிறைந்திருந்தபோதும், “ஆவிக்குரியதாக்குதல்” எனும் முறை மிகவும் மோசமானது. இம்முறை வேத சத்தியங்களை நாசப்படுத்திவிடும் முறையாகும். இம்முறையை அமாநுஷ்ய விளக்கமளிக்கும் முறை என்றும் கூறலாம்.