ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்பு

தொகுதி 1 – நூல் மதிப்பீடு

நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸைப் பற்றிய ஆக்கத்தை நான் எழுதிக்கொண்டிருந்தபோது அவரது நாட்குறிப்பை ஆங்கிலத்தில் அவருடைய மகன் தொகுத்திருந்தது பற்றி அறிந்தேன். அதைக் கணனியில் இருந்து பதிவிறக்கம் செய்து வாசித்த பின் என் ஆக்கத்தைத் திருமறைத்தீபத்தில் வெளியிட்டிருந்தேன். அது வெளிவருவதற்கு முன், ரேனியஸின் நாட்குறிப்பு தமிழில் வெளியிடப்பட்டிருப்பதாக நண்பர் தேவராஜ் சொன்னதால், அவருடைய துணையோடு அதைப் பெற்றுக்கொண்டேன். அது மூன்று பாகமாக வெளிவந்திருக்கிறது. முதலாவது தொகுதி 2016ல் வெளியிடப்பட்டிருக்கிறது. உன்னத சிறகுகள் என்ற பதிப்பகம் அதை வெளியிட்டது. இதைத் தொகுத்தவர் ஜெபக்குமார் என்ற இளைஞர் என்றும், அவர் ஐக்கிய அரபு குடியரசில், அபுதாபியில் வாழ்கிறார் என்றும் அறிந்துகொண்டேன். இதை மொழிபெயர்த்தவர் வினோலியா. வேறு சிலரும் அவருக்கு மொழிபெயர்ப்பில் துணையாக இருந்திருக்கிறார்கள்.

Continue reading