வசனத்தின் மெய்யான அர்த்தத்தைக் கண்டறிதல்

அதிகாரம் 6 – A.W. பின்க்

“பொருள் விளக்கம்” (Interpretation) என்ற வார்த்தை தீர்க்கமானதும், விரிவானதுமான அர்த்தத்தைத் தன்னில் கொண்டுள்ளது. தீர்க்கமானது என்கிறபோது அது ஒரு பத்தியின் இலக்கண ரீதியிலான அர்த்தத்தை அழுத்தமாக விளக்குகிறது. விரிவானது என்கிறபோது அது அப்பத்தியின் ஆத்மீக அர்த்தத்தை விளக்குகிறது. வேதத்தை விளக்குகிற ஒருவர், வேதஉட்பொருள் விளக்க விதிகளைப் பயன்படுத்துவதில் எந்தவிதத்திலும் வளைந்துகொடுக்காதவராக இருந்தால், அவருடைய அறிவுத்திறன் மூலமாக ஒரு விதத்தில் நன்மையைப் பெற்றாலும், கர்த்தருடைய மக்களுக்கு நடைமுறையின் அடிப்படையில் அவர் பெருமளவுக்குத் துணைபோகிறவராக இருக்க மாட்டார். உணவில் காணப்படும் இரசாயன அம்சங்களின் பண்புகளைப் பட்டியலிட்டு விளக்குவது, பசியிலிருக்கிற ஒருவனுடைய பசியைப் போக்காது. அதேபோல், எபிரெய, கிரேக்க மொழிகளிலுள்ள வார்த்தைகளின் மிக ஆழமான பொருளை விளக்குவது (சில இடங்களில் அவசியமாக இருந்தபோதும்), கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒருவர், தன்னுடைய விசுவாசத்திற்கான நல்ல போராட்டத்தில் ஈடுபடுவதில் அவருக்குப் பெரியளவில் உதவாது. இப்படிக் கூறுவதால் நாம் அறிஞர்களை அவமதிக்கவில்லை, அத்தோடு கர்த்தருடைய வார்த்தையைக் கையாளுகிற வேளையில் தங்களுடைய கற்பனைக் குதிரையை ஓடவிடுகிறவர்களை ஆதரிக்கவும் இல்லை. மாறாக, வேதத்தை விளக்குகிறவர்கள், சத்தியத்தை எடுத்துரைப்பதோடு, அதைக் கேட்கிறவர்களின் இருதயத்தை ஊக்கமடையச் செய்து, பத்திவிருத்தியடையவும், அவர்களில் நன்மையான மாற்றங்கள் ஏற்படுவதையும் மைய நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம்.

Continue reading