தகவல் சேகரிப்பு – கற்றறிதல் – எதிர்வினைகள்

சிறு வயதில் இருந்தே என் தந்தையைப் பார்த்தும், எனக்குப் பள்ளி ஆசிரியர்களாக இருந்த சில இலக்கியவாதிகளின் செல்வாக்காலும் நான் வாசிக்கும் வழக்கத்தை வளர்த்துக்கொண்டேன். அக்காலத்தில் வாசிப்பு எனக்கு இனிப்பு சாப்பிடுவது போல் இருந்து வந்தது. எத்தகைய நூல்களை வாசிக்க வேண்டும், யாருடைய நூல்களை வாசிக்க வேண்டும் என்பதையெல்லாம் நானே கற்றுக்கொண்டேன். எதைத் தள்ளிவைக்கவேண்டும் என்பதையும் அறிந்துகொண்டேன். என் வாசிப்புப் பழக்கம் என் ஆர்வங்களுக்கும், சிந்தனைக்கும் ஏற்ப என்னோடு இணைந்து வளர்ந்தது. வாசிப்பிலும் இலக்கியத்திலும் ஆர்வம் காட்டிய இரண்டு நண்பர்கள் மட்டுமே அன்றெனக்கிருந்தனர். ஒருவர் இப்போது உயிரோடில்லை. இன்னொருவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அக்காலங்களில் நூலகங்கள் எல்லா ஊர்களிலும் இருக்கவில்லை. இருப்பவற்றில் அங்கத்தவராக இணைவதும் சுலபமாக இருக்கவில்லை. இருந்தும் என் வாசிப்புத் தாகம் எல்லாத் தடைகளையும் மீறி என்னை வாசிப்பில் ஈடுபட வைத்தது. அந்த வாசிப்பே எழுதவும் கற்றுத் தந்தது. இது பற்றியெல்லாம் “சட்டையை விற்றாவது நூல்களை வாங்கு” என்ற நூலில் விளக்கியிருக்கிறேன். வாசிக்க வேண்டியதன் அவசியத்தை “இன்றியமையாத வாசிப்பு” – நவம்பர் 2015, ஆக்கத்திலும் விளக்கியிருக்கிறேன்.

Continue reading