தயாரித்துப் பிரசங்கம் செய்தல்

பெரும்பாலான தமிழ் பிரசங்கிகள் பிரசங்கங்களைத் தயாரித்துப் பிரசங்கம் செய்வதில்லை. அவர்கள் தயாரித்துப் பிரசங்கம் செய்வதை ஆவிக்குரிய செயலாகக் கருதுவதில்லை. ஆவியிருக்கிறவன் ஆவியானவரிடம் இருந்து நேரடியாகவே பிரசங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் ஈவைக் கொண்டிருப்பதாக அவர்கள் மிகத் தவறாக எண்ணி வருகிறார்கள். இது பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளைப் பற்றியும், பிரசங்கப்பணி பற்றியும் தெளிவான இறையியல் நம்பிக்கைகளைக் கொண்டிராததால் ஏற்படும் விளைவு. இதனால் பிரசங்கம் தமிழினத்தில் மிகவும் கீழான நிலையில் இருந்து வருவதை வாசகர்கள் அறிவார்கள். ஐந்து நிமிடம் ஒரு தமிழ்ப் பிரசங்கத்தைக் கேட்டாலே அது தயாரிக்கப்பட்ட பிரசங்கமா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரையில் கவனத்தோடு தயாரிக்கப்பட்டுச் செய்யப்படும் பிரசங்கங்கள் மட்டுமே ஆவியானவரின் ஆசீர்வாதத்தைக் கொண்டிருக்கும் பிரசங்கங்கள். அத்தகைய பிரசங்கங்களைச் செய்வதற்குப் பயன்படுத்தவேண்டிய பத்துக் குறிப்புகளை நீங்கள் இந்த ஆக்கத்தில் வாசிக்கலாம். ஜெபத்தோடு இவற்றைப் பின்பற்றுகிற பிரசங்கி வீண்போக முடியாது. உங்கள் பிரசங்கங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமானால் இவற்றைப் பின்பற்றி உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்வதோடு, ஆத்துமாக்களுடைய இருதயங்களுக்கும் பாதுகாப்பளியுங்கள்.

Continue reading