மத்தேயு 13 ம் அதிகாரத்தில் அநேக உவமைகள் இருப்பதை நாம் காணலாம். அதில் 7 உவமைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. இத்தனை உவமைகளை லூக்கா 15, 16 அதிகாரங்களில் நாம் வாசிப்பதில்லை. அங்கு 5 உவமைகள் மட்டுமே காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே சமயத்தில் ஆண்டவரால் சொல்லப்பட்டவையாகும்.
மத்தேயு 13:1
“இயேசு அன்றையதினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.”