ஆவிக்குரிய போதகனா? அடக்கியாளும் ஆகாபா?

போலிப் பிரசங்கிகளையும், போலிப்போதகர்களையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். வேதம் அத்தகையோரைப் பற்றி எச்சரிக்கை செய்து சபைகளுக்குள் அவர்களுக்கு இடங்கொடுக்கக் கூடாது என்று தெளிவாகவே விளக்குகிறது. ஆனால், அந்தவிதத்தில் போதிக்கும் விஷயத்தில் முழுப் போலிகளாக இல்லாமல் திருச்சபையை நடத்துகின்ற விதத்தில் போலித்தனத்தைக் கையாளுகிறவர்களைப் பற்றி எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை. நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இந்தப் போலித்தனம் காட்டாறாகப் பாய்ந்தோடி எந்த ஆவிக்குரிய கூடுகையும் வேதபூர்வமான திருச்சபையாக இல்லாமல் இருக்கும்படிச் செய்து வருகிறது.

Continue reading