மத்தேயு 13 ஆம் அதிகாரத்தில் ஒரு உவமையை ஆராய ஆரம்பித்தோம். அந்த அதிகாரத்தில் பல உவமைகள் காணப்படுகின்றன. அவற்றில் முதலாவது உவமையான விதைக்கிறவனின் உவமையைக் கடந்த இதழில் கவனித்தோம். அதில் முதலாவதாக விளக்கப்பட்டிருக்கும் வழியருகே விழுந்த விதையைக் கடந்த இதழில் விளக்கியிருக்கிறேன். இந்த ஆக்கத்தில் நாம் அதற்கு அடுத்து விளக்கப்பட்டிருக்கும் கற்பாறை நிலத்தில் விழுந்த விதையை ஆராயப் போகிறோம்.